தற்போது நிறைய பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நோய் ஏற்படுகிறது. உணவு முறை, வாழ்க்கை முறையில் மாற்றம், மன அழுத்தம் போன்றவற்றாலும் வெள்ளை ஒழுக்கு ஏற்படுகிறது.
வெள்ளை ஒழுக்கை பல பெண்களும் ஒரு நோயாக பொருட்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர். இது பின்னாளில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
எனவே, வெள்ளை காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழா நெல்லிச் சமூலம், பெரு நெருஞ்சில் இலை, அருகம்புல் வகைக்கு ஒரு கைப்பிடியளவுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிருடன் கலந்து குடிக்க எவ்வளவு நாட்பட்ட வெள்ளை ஒழுக்காக இருந்தாலும் குணமாகும்.
இதேப்போல பல்வேறு பிரச்சினைகளுக்கும் காக்கரட்டான் மருந்தாக உள்ளது. அதாவது, காக்கரட்டான் வேரைப் பாலில் அவித்து, பாலோடு அரைத்துச் சுண்டைக்காய் அளவு 2 வேளை 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வர மேக வெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர்ப் பாதை அழற்சி, நீர் எரிச்சல் குணமாகும்.

No comments:
Post a Comment